- நாயனார் நாகேந்திரன்
- விஜய்
- சென்னை
- தமிழ்நாயர்
- நாகேந்திரன்
- தமிழ் நாயனா
- கலிமுத்து
- வீரவனநல்லூர், நெல்லா மாவட்டம்
சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காளிமுத்து என்பவரையும் அவரது 5 வயது மகனையும் சிலர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இப்படியொரு பயங்கரம் நடக்குமளவிற்கு சட்டம் -ஒழுங்கு சீரழிந்து கிடப்பதை வேடிக்கை பார்க்கவா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்? குற்றவாளிகள் பயமின்றி துணிச்சலாக சுற்றி வருவது வெட்கக்கேடு. எனவே, இனியாவது குற்றங்களை குறைப்பதிலும் குற்றவாளிகளை துடைத்தெறிவதிலும் சிறப்பு கவனம் செலுத்தி, சந்தி சிரிக்கும் சட்டம் -ஒழுங்கை நீங்கள் சீர்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
