×

குற்றவாளிகள் பயமின்றி துணிச்சலாக சுற்றுகின்றனர்; சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துங்கள்: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காளிமுத்து என்பவரையும் அவரது 5 வயது மகனையும் சிலர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இப்படியொரு பயங்கரம் நடக்குமளவிற்கு சட்டம் -ஒழுங்கு சீரழிந்து கிடப்பதை வேடிக்கை பார்க்கவா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்? குற்றவாளிகள் பயமின்றி துணிச்சலாக சுற்றி வருவது வெட்கக்கேடு. எனவே, இனியாவது குற்றங்களை குறைப்பதிலும் குற்றவாளிகளை துடைத்தெறிவதிலும் சிறப்பு கவனம் செலுத்தி, சந்தி சிரிக்கும் சட்டம் -ஒழுங்கை நீங்கள் சீர்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : NAYANAR NAGENDRAN ,VIJAY ,Chennai ,Tamil Nayyar ,Nagendran ,Tamil Nayana ,Kalimuthu ,Veeravanallur, Nella district ,
× RELATED எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய...