- அனிதா ராதாகிருஷ்ணன்
- கனிமொழி
- சென்னை
- கனிமொழி எம்.பி.
- அமைச்சர்
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- முன்னாள் அமைச்சர்
- தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
சென்னை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைத்துக்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை, தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் திமுக அடிபணியாது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
