×

கோயில்களில் நடைபெறும் குற்றங்கள் குறித்து இ-மெயிலில் புகார் அளிக்கலாம்: அமைச்சர் ரமேஷ் தகவல்

சென்னை: கோயில்களில் நடைபெரும் குற்றங்கள் குறித்து இ-மெயிலில் புகார் அளிக்கலாம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களைப் பற்றி minister_hrce@tn.gov.in என்ற எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள்.

நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Ramesh ,Chennai ,Hindu Religious and Endowments ,Hindu Religious and Endowments Department ,Tamil Nadu… ,
× RELATED தானியங்கி பட்டா மாறுதல் – 15 நாட்களில்...