- வருவாய் நாள்
- சிவகங்கை
- தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம்
- சிவகங்கை ஆட்சியர் அலுவலகம்
- மாவட்ட வருவாய் அலுவலர்
- செல்வாசுரபி
- ஆர்டிஓ
- ஜெபிக்ராசியா
- தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கம்…
சிவகங்கை, ஜூலை 3: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த்துறை தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி தலைமை வகித்தார். சிவகங்கை ஆர்டிஓ ஜெபிகிரேசியா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத்தலைவர் தமிழரசன் வாழ்த்திப் பேசினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முத்துலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ராஜாசிங் மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் வளனரசு நன்றியுரை ஆற்றினார்.
