×

வருவாய்த்துறை தினம் கொண்டாட்டம்

 

சிவகங்கை, ஜூலை 3: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த்துறை தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி தலைமை வகித்தார். சிவகங்கை ஆர்டிஓ ஜெபிகிரேசியா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத்தலைவர் தமிழரசன் வாழ்த்திப் பேசினார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முத்துலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ராஜாசிங் மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் வளனரசு நன்றியுரை ஆற்றினார்.

 

Tags : Revenue Day ,Sivaganga ,Tamil Nadu Revenue Officers Association ,Sivaganga Collectorate ,District Revenue Officer ,Selvasurabi ,RTO ,Jebikracia ,Tamil Nadu Revenue Officers Association… ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.49...