- சந்தன ஊர்வலம்
- தொண்டி
- சந்தனக்கட்டை
- பாசிப்பட்டினம் தர்கா
- பாசிபட்டினம்
- மகான் சர்தார் நைனா முகமது சாஹிப்
- ஒலியுல்லா தர்கா
- தொண்டி…
தொண்டி, ஜூலை 2: தொண்டி அருகே உள்ள பாசிபட்டினம் தர்ஹா சந்தனக் கூடு ஊர்வலம், உலக நன்மை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. தொண்டி அருகே உள்ள பாசிபட்டினம் மகான் சர்தார் நெய்னா முகமது சாஹிபு ஒலியுல்லா தர்ஹா 315ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 20ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு முக்கிய நிழ்வான சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு கிராமங்கள் மற்றும் முக்கிய வீதி வழியாக வந்த ஊர்வலம் நேற்று அதிகாலை தர்ஹாவை அடைந்தது. இதையடுத்து உலக நன்மை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
