ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் தரைதட்டியது

துபாய்: அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும், கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் உள்ளது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அனுமதிக்காத கடல் வழியை பயன்படுத்திச் சென்ற வெளிநாட்டு சரக்கு கப்பல் தரைதட்டியதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சி எந்த நாட்டை சேர்ந்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி மீது தமக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்த தகவலை ஈரான் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories: