ஜோகன்னஸ்பர்க்: தென்ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள அனைவரும் ஜூன் 30ம் தேதிக்குள் நாட்டை விட்டு வௌியேற வேண்டும் என கெடு விதித்திருந்தனர். இந்த கெடு நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் பேரணியாக சென்ற அந்நாட்டு இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஆப்பிரிக்க விடுதலை பாடல்களை பாடினர்.
