ஆந்திராவில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திராவின் பிரதிபாடு பகுதியில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில், 4 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலம் பிரதிபாடு பகுதியில் 2 லாரிகள் மோதி பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். போயபாலேம் பகுதிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அதிவேகமாக மற்றொரு லாரி மோதியது. சாலையில் டீசல் தீர்ந்து நின்ற லாரி மீது மோதாமல் தவிர்க்க மற்றொரு லாரி நிறுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பை தாண்டிச் சென்று எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் தீயில் கருகி 2 ஓட்டுநர்கள் மற்றும் 2 கிளீனர்கள் என 4 பேர் உயிரிழந்தனர். இந்த லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Related Stories: