×

அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டு அருகே அமைச்சரை கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

 

அறந்தாங்கி, ஜூன் 30: அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டு அருகே தவெக அமைச்சரை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். அறந்தாங்கி நகரச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொது இடத்தில் போதை பொருளை உபயோகப்படுத்திய தவெக மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி முன்னால் எம்எல்ஏ உதயம் சண்முகம், மணமேல்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திராமசாமி, திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கமணி, அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன், ஆவுடையார் கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில கலந்து கொண்ட 59 திமுக நிர்வாகிகளை அறந்தாங்கி போலீசார் கைது செய்து கடடுமாவடி சாலையில் உள்ள தனியார் மண்டத்தில் அடைத்தனர்.

 

Tags : Dimuka ,Arthanangi ,Arantangi ,Minister ,Dweka ,Pudukkottai ,Southern ,District ,Student ,Kalichelvan ,Aranthangi ,City ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்