சென்னை: புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் தரவுகளை மின்வாரியத்துடன் பகிர்வது கட்டாயம் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மின் உற்பத்தி நிலையங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை உடனுக்குடன் பகிர வேண்டும் . தரவுகளை பகிராமல் இருந்தால் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 10% மின் கணக்கீடு கழித்து கணக்கிடப்படும். 30 நாட்களுக்கு பிறகு முழு மின் உற்பத்தியும், விலகல் கணக்கீட்டு செயல்முறைகளில் இருந்து விலக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
