12 வயது சிறுமி பலாத்காரம்

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிராமத்தில் 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது பீகார் சிறுமி தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். பெற்றோர்கள் வேலைக்குச்சென்ற நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பேன்சி ஸ்டோர் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அக்கம்பக்கம் தேடி பார்த்துவிட்டு பள்ளி மாணவியை காணவில்லை என சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காணாமல் போய் ஒரு வாரம் ஆன நிலையில் நேற்று அந்த சிறுமியுடன் பீகாரை சேர்ந்த வாலிபர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வடமாநில வாலிபர் திருமண ஆசை வார்த்தை கூறி தன்னை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தை சேர்ந்த புல் பாபு குமார் (20) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: