×

அமோனியா வாயு கசிந்த விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

திருவள்ளூர் கன்னிகைப்பேர் கிராமத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ம் தேதி அம்மோனியா வாயு கசிவு ஏஏற்பட்டத்தில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ்காந்தி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் நேற்று வரை 15 பெண்கள் உயிரிழந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கபிதாஜூங்கா(22) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்களில் 14 சடலங்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 2 சடலங்களை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அமோனியா வாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை, 16ஆக உயர்ந்துள்ள நிலையில் ”இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு ஒரு வாரத்தில் ‘சீல்’ வைக்கப்படும்,” என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.

Tags : Kannikapir ,Thiruvallur ,Rajivganti ,Stanley Government Hospitals ,Chennai ,
× RELATED அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா: தவெகவில் இணைய திட்டம்