- அஇஅதிமுக
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- பொதுச்செயலர்
- எஸ்.ஜி. சுப்ரமணியன்
- சர்வதேச எம்ஜிஆர் மன்றம்
- வி.எம். ராஜலட்சுமி
- அதிமுக மகளிர் அணி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் இன்று முதல் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
மேலும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக எஸ்.எம்.சுகுமார் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்), எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர் தொகுதி), கே.சி.பழனிச்சாமி (ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக மகளிர் அணி இணை செயலாளராக வி.எம்.ராஜலட்சுமி (முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
