தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விஷூ மகாஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். கூட்டத்தில் விவசாயிகள் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டு கூட்ட அரங்கம் இருளில் மூழ்கியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் அமைதியாக நின்றனர். இதையடுத்து ஊழியர்கள் ஜெனரேட்டரை இயக்கி மின் விநியோகம் வழங்கினர். சற்று நேரத்தில் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது. முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் 5 ஏக்கர் வரையில் உள்ள விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதியின்படி கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
