போச்சம்பள்ளி, ஜூன் 25: தமிழக அரசு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், பள்ளி கல்லூரி மாணவிகள் நலன் கருதி பாலியல் சீண்டல், பாலியல் குற்றங்கள் ஆகியவற்றை தடுக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பு குறித்து சிங்கப்பெண் சிறப்பு படை ரோந்து வரும் நிலையில், மத்தூர் பஸ் நிலையத்தில் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவிகளிடம், பேருந்தில் ஏறி ஆய்வு மேற்கொண்டனர்.
பஸ் பயணத்தின் போது, உங்களுக்கு யாரேனும் இடையூறு செய்கிறார்களா என்றும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிடம் சிங்கப்பெண் சிறப்பு படை எஸ்ஐ சங்கீதா விசாரித்து, பெண்கள் பாதுகாப்பு குறித்தும், தங்களுக்கு இடையூறு செய்பவர்களிடம் எப்படி பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து மாணவிகளிடம் 24 மணி நேரமும் செயல்படும் உதவி புகார் எண்கள் 100, 1091 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு, உங்களுக் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார்களை தெரிவிக்கலாம். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மீட்கப்படுவீர்கள் என கூறினர்.
