தஞ்சாவூர், ஜூன் 25: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 251 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ளன.
