விளாத்திகுளம், ஜூன் 25: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதூர் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாகலாபுரம் அருகேயுள்ள சமத்துவபுரம் வன்னிகுளம்காலனி, பள்ளிவாசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் உப்பாக இருப்பதால் அருகிலுள்ள பேராய்குடி கண்மாயில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். நாகலாபுரம் தெற்கு பஜார் பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுநீர் கால்வாயை முழுமையாக சீரமைத்த பின்பு ஆக்கிரமிப்பிற்கு முன்பு இருந்ததுபோல் பொதுமக்கள் இடையூறின்றி செல்லும் வகையில் அகலமான சாலையாக அமைத்து தர வேண்டும்.
