அறந்தாங்கி, ஜூன் 25: அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கண்காணிப்பு கேமரா வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1996-2003ம் ஆண்டு வரை உள்ள ஆண்டுகளில் 6 முதல் 12 வகுப்பு வரையில் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 8 கண்காணிப்பு கேமரா பள்ளியில் பொருத்த வழங்கி உள்ளனர்.முன்னாள் மாணவர்களின் இந்த செயலுக்கு பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
