×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு!

 

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் நாளை ஒருநாள் நீட்டித்து தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் / ஏப்ரல் 2026 பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி பெற்ற மாணாக்கர்களுக்கு, மறுகூட்டல் / மறுமதிப்பீடு விண்ணப்பிக்க 17.06.2026 முதல் 23.06.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது மாணாக்கர்களின் நலன் கருதி மாணாக்கர்கள் மறுகூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு நாள் கூடுதல் கால அவகாசம் 25.06.2026 அன்று வழங்கப்படுகிறது.

மாணாக்கர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டத் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,
× RELATED தமிழக சட்டப்பேரவை நிகழ்வு;...