×

தமிழக சட்டப்பேரவை நிகழ்வு; எழுதிக்கொடுக்கும் வசனத்தை பேசி நடிப்பதுபோல் உள்ளது: நயினார் நாகேந்திரன் பேட்டி

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று அந்த மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, சட்டசபை தேர்தலுக்கு பிறகு தற்போதுள்ள சூழ்நிலையில் எவ்வாறு பாஜகவை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்வது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி ஆலோசனை நடத்தினர். மேலும் அண்ணாமலை இயக்கம் தொடங்கிய பின் வெளியேறிய கட்சி நிர்வாகிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:பாஜக, அகில இந்திய தேசிய கட்சி.

இத்தகைய கட்சிக்கு எந்த சரிவும் இல்லை, தொய்வும் இல்லை. எந்த ஒரு நபரின் வருகையும் வெளியேற்றமும் பாஜகவை ஒருபோதும் பாதிக்காது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் மாற்றம் வரும். தற்போது இது நிகழ்ந்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்கும்போது, எழுதிக்கொடுத்து வசனம் பேசுவதாக தெரிகிறது. ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால் ஸ்டூடியோவில் நடைபெறும் காட்சிகள் போல சட்டசபை உள்ளது. தவெக நிர்வாகிகள் பல்வேறு குற்ற செயல்களை புரிந்து வரும் நிலையில், தமிழக மக்கள் ஏமாற்று பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Nayanar Nagendran ,Kanchipuram ,BJP ,Kanjipura ,Aravind Menon ,Nayinar Nagendran ,
× RELATED பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி கோரி...