கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் இருந்து முட்டை நீக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்த பாஜக அரசு இஸ்கானை நியமித்துள்ளது. இந்நிலையில் வாரம் ஒருநாள் முட்டை வழங்கப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக சோயா, பனீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தை பறிக்கும் முயற்சி இது என திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
