- தெலுங்கானா ஊராட்சி
- ஹைதெராபாத்
- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
- ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
- டொனால்ட் ட்ரம்ப்
- 250 வது சுதந்திர தினம்
- அமெரிக்கா.…
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை தெலுங்கானா அரசு சூட்டப்பட்டது. அமெரிக்காவின் 250வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, சாலைக்கு ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என பெயரிட்டு சாலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா ரைசிங் மாநாட்டின் போது, இந்தியா – அமெரிக்கா கூட்டாண்மையில் ஹைதராபாத்தின் அதிகரித்து வரும் பங்கின் அடையாளமாக அமெரிக்க
அதிபர் டிரம்பின் பெயரை ஒரு சாலைக்கு சூட்டுவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன்படி, ஹைதராபாத்தின் நிதி மாவட்டமான நானக்ராம்குடாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஒட்டியுள்ள ஒரு முக்கிய சாலைக்கு, ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் தெலுங்கானா துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநிலத் துணை முதல்வர், ஹைதராபாத் குடும்பங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா என்பது வரைபடத்தில் உள்ள ஒரு நாடு மட்டுமல்ல. அது பாஸ்டனில் இருக்கும் ஒரு மகன், நியூ ஜெர்சியில் இருக்கும் ஒரு மகள், சீட்டில் இருக்கும் ஒரு நண்பன் ஆகும். ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்ற பெயரிடுதல் வெறும் சடங்கு ரீதியான சாலைப் பலகையாக மட்டும் அல்ல. இந்த சாலை மாணவர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், குடும்பங்கள் மற்றும் கனவு காண்பவர்களின் பல பயணங்களைச் சுமந்து செல்லட்டும் என்று அவர் தெரிவித்தார்.
