பண்ருட்டி, ஜூன் 24: பண்ருட்டி அருகே பனப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வழகன்(36). சம்பவத்தன்று காலை இவர் பூங்குணம் விஏஓ அலுவலகம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்கிற மூர்த்தி(51) என்பவருக்கும், இவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்றைய தினம் இரவு 8.30 மணி அளவில் பூங்குணம் மெயின் ரோடு புத்து மாரியம்மன் கோவில் அருகே செல்வழகன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, மீண்டும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேசன், செல்வழகனை தாக்கியதோடு, அருகில் இருந்த கடையில் இருந்த சூடான எண்ணெய்யை அவரது தொடையில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து செல்வழகன் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் என்கிற மூர்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
