விபீஷணர் பட்டாபிஷேகம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பிரதிஷ்டை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று தனுஷ்கோடி சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேக வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வீபீஷணர் ராமர் தீர்த்ததிற்கு எழுந்தருளி அங்கிருந்து கோதண்டராமர் கோயில் பட்டாபிஷேகத்திற்கு எழுந்தருளினர்.

நகர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் உள்ளிட்ட மூர்த்திகள் பகல் 11:30 மணியளவில் கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுமார் மதியம் 1 மணியளவில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டுதல் வைபவம் நடந்தது. விபீஷணருக்கு பட்டு அங்கவஸ்திரத்தினால் பரிவட்டம் கட்டி பட்டாபிஷேக வைபவத்தை சஞ்சீவி குருக்கள் நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: