ஈரான் போர் செலவுக்காக ரூ.7.5 லட்சம் கோடி கேட்கிறது பென்டகன்

வாஷிங்டன்: அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் ஓய்ந்துள்ள நிலையில், இப்போரால் அமெரிக்கா பெரும் ஆயுத இழப்புகளை சந்தித்துள்ளது. இவற்றை ஈடுகட்ட அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் 80 பில்லியன் டாலர் நிதியை கேட்டுள்ளது. போரின் ஆரம்ப கட்டத்தில் பென்டகன் 200 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிட்டிருந்தது.

அதன்படி பார்த்தால் 80 பில்லியன் டாலர் குறைவான தொகை என்றாலும், ஈரான் போரால் அமெரிக்காவின் இழப்பு மேலும் பல்லாயிரம் டாலர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், அடுத்த ஆண்டிற்கான பென்டகன் பட்ஜெட் ஒதுக்கீடு 1.5 டிரில்லியன் டாலராக (ரூ.150 லட்சம் கோடி) சாதனை அளவாக இருக்க வேண்டுமென அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். இது நடப்பாண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 50 சதவீதம் அதிகம்.

Related Stories: