வங்கதேச அதிபர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமருக்கு அதிகாரம்

டாக்கா: வங்கதேச அரசியலமைப்பின் படி, அதிபர் பதவி காலியான 90 நாட்களுக்குள் அப்பதவியை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டவுடன், கட்சியின் தலைவரும் பிரதமரும் அதிபர் பதவிக்கான பி.என்.பி. வேட்பாளரைத் தீர்மானிப்பார்கள், என உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது கூறினார்.

இதனிடையே அதிபர் தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளரைத் தேர்வு செய்ய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு ஆளும் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) அதிகாரம் அளித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிஎன்பி.யின் தேசிய நிலைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என வங்கதேச நாளிதழ் தெரிவித்துள்ளது.

Related Stories: