சென்னை: திருவள்ளூரில் அம்மோனியா கசிவு விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. வாயுக் கசிவு தொடர்பாக விசாரணை நடத்த குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அரசு அமைத்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலரும் இடம்பெற்றிருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
