விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள பரவாடா தொழிற்பூங்காவில் அமைந்துள்ள ‘தக்ஷின் எனர்ஜி’ (Dakshin Energy) நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அனகாபள்ளி மாவட்ட இணை ஆட்சியர் சூர்யமான் படேல், மருந்து உற்பத்தி நிறுவனத்தில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.
