- உச்ச நீதிமன்றம்
- லக்னோ
- ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்தகஸ்திரா கோயில்
- உத்திரப்பிரதேசம்
- ஐகோவில்
- காணிக்கை
- விழா
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில், கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது. இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் கோவில் உண்டியல் காணிக்கை பணம் மற்றும் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள், மத்தியில் ஆளும் பா.ஜ.க மற்றும் உத்தரப் பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் ரூ.200 கோடி வரை நிதி மோசடி நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடி குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமஜென்மபூமி அறக்கட்டளையில் நடந்த நிதி மோசடி, சட்ட விரோத செயல்கள் குறித்து எஸ்ஐடி விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் எண்ணும் பணிக்கு ஆட்களை நியமித்ததிலேயே முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளின் பரிந்துரை பேரிலேயே ஊழியர்கள் நியமிக்கப்பட்டது அம்பலமாகியது. அயோத்தி ராமர் கோயிலில் கிலோ கணக்கில் தங்கம் சுருட்டப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், FIR பதிவு செய்யவும், நியாயமான மற்றும் காலவரையறைக்குட்பட்ட விசாரணையை மேற்கொள்ளவும் உத்தரவிடக் கோரி அஜய் குமார் ராய் மற்றும் தினேஷ் குமார் யாதவ் ஆகிய இரு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே நிதி மோசடி பூதாகரமாக இருக்கக்கூடிய நிலையில் உண்டியல் மற்றும் தங்கம் திருட்டு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
