திருச்சி,ஜூன் 23: திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜூன் 21ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகே குட்கா விற்ற ரங்கம் அல்லித்துறை பகுதியைச் சேர்ந்த பரத் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 10 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.
