திருவெறும்பூர், ஜூன் 18: திருவெறும்பூர் பகுதியில் பெய்த கோடை மழையால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
திருவெறும்பூர் பகுதியில் நேற்று மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த திடீர் மழையால் நிலையில் திருவெறும்பூர் பகுதியில் பகவதிபுரம், பிரகாஷ். நகர்எறும்பீஸ்வரர் நகர், அரசங்குடி, விளாங்குளம், வேங்கூர், கீழமுல்லக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என விட்டு விட்டு மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர்.
