×

உதகையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்த்த கனமழை

நீலகிரி: உதகை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக கொட்டிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைத்திருக்கக்கூடிய நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி இன்றைய தினம் இரண்டுவது நாளாக நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சில பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. குறிப்பாக உதகை நகரில் நேற்றைய தினம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில், இன்றைய தினமும் அதேபோல ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்குதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் மழைநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியதால் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ரயில்வே மேம்பாலத்தில் மூன்றடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு என்பது நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் இயக்கப்பட்டது.

தொடர்ச்சியான இந்த மழையினால் உதகையில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. காற்றில் ஈரப்பதம் 81% ஆக உள்ளதால், மலைப்பகுதிகளில் மெல்லிய மூடுபனியும் கடுமையான குளிரும் நிலவுகிறது. நீர்நிலைகளில் நீர்வளர்ப்பு அதிகரித்திருப்பதால் உள்ளூர் மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Tags : Nilgiri ,Udakai ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின் பெயர்...