கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பதில் மோதல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். சிலைக்கு தவெகவினர் மாலை அணிவிக்க வந்ததால் சிலை வாயிலை அதிமுகவினர் பூட்டினர். எம்.ஜி.ஆர். சிலை வாயிலை அதிமுகவினர் பூட்டியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஆரல்வாய்மொழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுகவினர் அனுமதி மறுப்பு தெரிவித்தனர்.
