×

கஞ்சா விற்ற வாலிபரிடம் போலீசார் விசாரணை

 

பந்தலூர், ஜூன் 22: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் மைதானம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சேரம்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் உள்ளிட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து, விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த சாஜஹான் (29) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Pandalur ,Cherambadi ,Cherambadi Koranchal Maidan ,
× RELATED மின்சாரம் தாக்கி டிரைவர் பலி