பாலக்காடு, ஜூன் 22: பாலக்காடு மாவட்டம் செருப்புழச்சேரி அருகே ஒடுவாங்காட்டைச் சேர்ந்த முகமதின் மகன் சித்திக் (31). ஜேசிபி வாகன டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது ஜேசிபி வாகனத்தை மிஷின் கன் மூலம் சுத்தம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். தொடர்ந்து அருகே இருந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு மாங்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செருப்புழச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
