திருவள்ளூர் இறால் ஆலை அமோனியா கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு

சென்னை: திருவள்ளூர் இறால் ஆலை அமோனியா கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 இளம் பெண்கள் உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்கள் அதிகாலையில் உயிரிழந்தனர். உயிரிழந்த 2 இளம்பெண்களின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: