×

காவிரி அணையே நிரம்பல தண்ணீர் எப்படி திறக்க முடியும்? ஒன்றிய அமைச்சர் அசால்ட் பதில்

பெங்களூரு: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே 50 வருடமாக காவிரி பிரச்னை நிலவுகிறது, அணை நிரம்பாத நிலையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என நெருக்கடி அளிப்பது சரியல்லை. தமிழ்நாடு அரசு இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என ஒன்றிய அமைச்சர் எச்.டி. குமாரசாமி கூறினார். ஒன்றிய தொழில் துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி மண்டியாவில் நிருபர்களிடம் கூறியதாவது, மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கே அதிகம் பயன் கிடைக்கும்.

ஆனால், காவிரி விஷயத்தில் தமிழ்நாடு கடந்த 50 வருடமாக பிரச்னையை உருவாக்கி கொண்டிருக்கிறது. பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிப்பது தவறு. காவிரி அணைகள் நிரம்பாத நிலையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என நெருக்கடி அளிப்பது சரியல்லை. தமிழ்நாடு அரசு இதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

Tags : Cauvery ,Union Minister ,Bengaluru ,Tamil Nadu ,Karnataka ,Tamil Nadu government ,
× RELATED பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 9 பேர் கைது