×

ராமர் கோயில் காணிக்கை மாயம் அயோத்தியை விட்டு வெளியே செல்ல கோயில் நிர்வாகிகளுக்கு தடை

அயோத்தி: ராமர் கோயில் காணிக்கை மாயமான விவகாரம் குறித்து விசாரித்து வரும் எஸ்ஐடி குழு கோயில் நிர்வாகிகள் அயோத்தியை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளது. அயோத்தி கோயிலுக்கு பக்தர்கள் அளித்த பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் மாயமானதாக சமாஜ்வாடி குற்றம் சாட்டியது. இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை(எஸ்ஐடி) மாநில பாஜ அரசு நியமித்தது.

அயோத்திக்கு வந்து விசாரணை நடத்திய எஸ்ஐடி குழு நேற்று லக்னோவுக்கு புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், ராமர் கோயிலில் பணியாற்றும் நிர்வாகிகள், அதிகாரிகள் யாரும் அயோத்தியை விட்டு வெளியே செல்லக்கூடாது என எஸ்ஐடி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து எஸ்ஐடி வட்டாரங்கள் கூறுகையில், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம், வெள்ளி நகைகள், வைரங்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த கற்கள் தொடர்பான பதிவேடுகள்,எஸ்ஐடியின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

அத்தகைய காணிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கணக்குப்பதிவுகளில் முரண்பாடுகள் உள்ளன. தங்கம், வெள்ளி ஆபரணங்கள் போன்றவற்றின் இருப்புப் பட்டியல், சேமிப்பு மற்றும் கணக்குப்பதிவு குறித்து கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் திருப்திகரமான பதிலை அளிக்கத் தவறினர். மகா கும்பமேளாவின் போது, ​​பெரும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் அயோத்தியை விட்டு செல்ல கோயில் நிர்வாகிகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது என தெரிவித்தன.

Tags : Ram Temple ,Ayodhya ,SIT ,Samajwadi Party ,
× RELATED தெற்கு காஷ்மீரில் நல்ல இதய...