சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் உள்ள ஒரு பள்ளியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;
தமிழக முதல்வர் விஜய் தேர்தலுக்கு முன்னால் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ரூ.2500 தரப்படும் என்றார். ஆனால் ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.1000 கூட செலுத்தப்படவில்லை. மாணவர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை தருவதாக கூறினார்கள், ஆனால் நான்கு பைசா கூட வரவில்லை. முதல்வர் சட்டமன்றத்தில் வாய் திறந்து பேசவில்லை.
சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படும் என கூறினார். அதுவும் தற்போது நடக்கவில்லை. முதல்வர் கூறிய எதுவும் தற்போது நடக்கவில்லை. மக்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என மக்களுக்கும் தெரியவில்லை. எப்படி முதல்வராக இருக்க வேண்டும் என அவருக்கும் தெரியவில்லை. இந்த சூழலில் நாடு தற்போது போய்கொண்டிருக்கிறது.
40 நாட்களில் 207 குற்றங்கள் நடந்துள்ளது. அதில் 40-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தவெக ஆட்சியில் மட்டும் நெல்லையில் 17 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. நெல்லையில் மதுபான பாரில் தவெக நிர்வாகிகள் மாமூல் வசூலில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் நிர்வாகிகளை தவெக விலைக்கு வாங்குகிறது.
எங்களின் கொள்கை இதுதான் என்று தவெகவினர் எப்போதாவது கூறியிருக்கிறார்களா..? விவசாயிகளின் கஷ்டம் என்ன என்று முதலமைச்சர் விஜய்க்கு தெரியுமா..? என கேட்டுள்ளார்.
