- கோயம்புத்தூர்
- Soundararajan
- மாரியம்மன் கோவில் வீதி
- புத்தூர், பட்டணம்
- திருச்சி சாலை
- பாலாஜி
- பட்டணம்.…
கோவை, ஜூன் 19: கோவை பட்டணம் புதூர், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (65). இவர் நேற்று முன்தினம் மதியம் திருச்சி ரோட்டில் ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த ஆட்டோவை பட்டணத்தைச் சேர்ந்த பாலாஜி (32) என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆட்டோ ஒண்டிப்புதூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சாலையில் நிலைதடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சவுந்தரராஜன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
