×

பாலியல் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தி கண்டன பேரணி

 

தாராபுரம், ஜூன் 15: தாராபுரத்தில் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பல்வேறு சமூக, அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. பேரணியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலியுறுத்தி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த பேரணியில் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அரசியல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

 

Tags : Protest march ,Tarapuram ,Tamil Nadu Thowheed Jamaat ,
× RELATED சாலையோரங்களில் எரிக்கப்படும் பின்னலாடை கழிவுகள்