வேலூர், ஜூன் 19: வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கப்பட உள்ளது. முதற்கட்ட கலந்தாய்வில் 700 பேர் சேர்ந்தனர். வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் உள்ள 984 இடங்களில் சேர 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் தரவரிசைப்பட்டியல், www.mgacvlr.edu.in எனும் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்த முதற்கட்ட கலந்தாய்வில் 700 மாணவர்கள் இளநிலை பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.
