×

புதிதாக அமைக்கப்படும் அணுகுசாலையின் சிறிய மேம்பாலத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அகற்ற வேண்டும்

 

தஞ்சாவூர், ஜூன் 18: பூதலூர் பிரிவு சாலையில் புதிதாக அமைக்கப்படும் அணுகுசாலையில் சிறிய மேம்பாலத்தில் தாய்த்தமிழை நிராகரித்து இந்தி திணிக்கப்படுவதை அகற்றக்கோரி வழக்கறிஞர் ஜீவகுமார் மற்றும் பொதுமக்கள் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதியிடம் மனு வழங்கினர்.
அந்த மனுவில் கூறியதாவது: தஞ்சாவூர்- திருச்சி சாலையில் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி செல்லும் அணுகுசாலையில் சிறிய மேம்பாலம் அமைக்கும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. இப்பாலத்தின் இருபுறமும் சிமெண்ட் சிலாப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் தேசிய நெடுஞ்சாலையை ஆங்கிலத்தில் NHAI என்று குறித்தும் அதனை இந்தியில் குறிப்பிட்டும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

Tags : Thanjavur ,Jeevakumar ,District ,Collector ,Revathi ,Bootalur ,
× RELATED ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் தீ விபத்து