×

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக 13 பேரிடம் ரூ.36.6 லட்சம் மோசடி

 

தண்டையார்பேட்டை, ஜூன் 19: தண்டையார்பேட்டை, வஉசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பேபி(38). இவர் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தெரிந்த நபர் மூலம் அறிமுகமான வினோத்பாபு என்பவர் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ரூ.3 லட்சம் கொடுத்தால், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறியதன்பேரில் கடந்த 2024ம் ஆண்டு, பேபி உட்பட 13 பேர் பல தவணைகளாக ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.36,60,000 கொடுத்தனர். தொடர்ந்து, வினோத்பாபு கொடுத்த குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை நகல் மற்றும் மின்சார அட்டை நகல் போலியானவை என தெரிந்தது. இதுகுறித்து பேபி புது வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து எம்கேபி நகர் டிஎன்எச்பி ஊழியர் குடியிருப்பை சேர்ந்த வினோத் பாபு(38) மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி(30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Slum Replacement Board ,Thandaiyarpet ,VOC Nagar ,Vinodbabu ,
× RELATED வழிப்பறியில் ஈடுபட முயன்ற 8 பேர் கும்பல் கைது