திருச்செந்தூர் – சென்னை இடையேயான செந்தூர் விரைவு ரயிலில் 5 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதுநாள் வரை 18 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயிலில், இனி 23 பெட்டிகள் இடம்பெறும்; ஒரு 2-tier AC, இரண்டு 3-tier AC, 2 ஸ்லீப்பர்(SL) பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுவதால், தினமும் 350-க்கும் மேற்பட்ட பயணிகள் கூடுதலாகப் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
