சென்னை: சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சோஃபா மாடல் ஆட்சிக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருத்தப்படுகின்றனர். அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கொள்முதல் செய்து வருகிறது தவெக அரசு. தவெக அரசு எதை கொள்முதல் செய்கிறதோ, இல்லையோ அடுத்த கட்சியினர், எம்எல்ஏவை தொடர்ந்து கொள்முதல் செய்கிறது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என அவர் தெரிவித்தார்.
