அரியலூர், ஜூன் 16: அரியலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளியை ஏற்றமால் நடத்துனர் அவமதிப்பு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அரியலூர் மாவட்டம் தத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி செல்வராஜ் (52) இவரது மனைவியுடன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வருவதற்காக தத்தனூரில் இருந்து அரியலூர் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்பொழுது ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூர் நோக்கி அந்த அரசு பேருந்து என்றது அருகில் இருந்த பொதுமக்களுடன் தானும் பேருந்தில் ஏறும் என்றால் அப்பொழுது நடத்துனர். நீங்கள் ஏறக்கூடாது என்று கூறியவுடன் ஏன் ஏறக்கூடாது என்று மாற்றுத்திறனாளி செல்வராஜ் கேட்டுள்ளார்.
அப்பொழுது நின்று கொண்டு செல்பவருக்கு இடம் உண்டு நகர்ந்து வருபவருக்கு செல்வதற்கு இடமில்லை என்று கூறி அவமதித்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். நீண்ட நேரம் காத்திருந்து அடுத்த பேருந்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த செல்வராஜ் தான் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்ததாகவும் அரசு பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்தியேகமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இது போன்ற மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் நிலை மிகுந்த மனவேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
