×

கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த 5 சிறுவர்கள் கைது

 

மதுரை, ஜூன் 16: மதுரை முனிச்சாலை ரோடு இஸ்மாயில்புரம் 19வது தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி தடயவியல் அறிவியல் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஓடைப்பட்டினம் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5 சிறுவர்கள் அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் தர மறுத்தார். இதனால் சிறுவர்கள் அழகர்சாமியை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 சிறுவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Madurai ,Alagarsamy ,19th Street, Ismailpuram, Munichalai Road, Madurai ,Odaipattinam junction ,
× RELATED ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் தீ விபத்து