குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க உள்ளதாக பிரிட்டன் அறிவிப்பு..!!

லண்டன்: பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். நடப்பாண்டுக்குள் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டு, 2027 முதல் சட்டம் அமலுக்கு வரும் . SNAPCHAT, TIKTOK, YOUTUBE, INSTAGRAM, FACEBOOK, எனத் தெரிவித்துள்ளார்.  இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கேர் ஸ்டார்மர் கூறியதாவது; தீங்கு விளைவிக்கும் டிஜிட்டல் சமூகவலைதளத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும்.

முழுமையான தடை விதிப்பதே சரியான தேர்வு என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. இந்த நடவடிக்கையை செயல்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது அரசாங்கங்களின் பொறுப்பு. நமது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியில் சமரசம் செய்துகொள்ள நான் தயாராக இல்லை. தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்த்தாலும் இந்த நடவடிக்கையை எடுப்பேன். இணையத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்பது நம் காலத்தின் மிகப்பெரிய விவாதங்களில் ஒன்றாகும் ஏன இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: