×

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. “குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறை தீர விசாரித்து குற்றமிழைத்த அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

Tags : Marxist Communist ,Kummidipundi ,Chennai ,Communist ,Tamil Nadu ,
× RELATED சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு...